திருக்குறளும்-விளக்கமும்
திருக்குறள் மனிதனாக பிறந்த அனைவரும் படித்துப் பயன்பெற வேண்டிய நூல். வாழ்க்கையின் தத்துவத்தை இரண்டே அடியில் உலகுக்கு கூறிய நூல். சாதி, மதம், வேற்றுமை என அனைத்திற்கும் அப்பாற்பட்ட நூல்.உலகில் உள்ள மக்கள் அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நூல்.உலகில் அதிகம் மொழிபெயர்க்கப்பட்ட நூல். நம் தமிழர்களின் தொன்மையை அடையாளம் கூறும் நூல் நம் திருக்குறள். உலகில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைவராலும் படிக்கப்படும் திருக்குறளை தமிழர்களாகிய நாம் விளக்கத்துடன் இங்கு படித்து பயன்பெறுவோம்.
இயல்-பயிரவியல்
பால்-அறத்துப்பால்
அதிகாரம்-கடவுள் வாழ்த்து
குறள் : 1
அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு
கலைஞர் உரை :
அகர எழுத்துகளுக்கு முதன்மை, ஆதிபகவன், உலகில் வாழும் உயிர்களுக்கு முதன்மை.
குறள் : 2
கற்றதனால் ஆய பயனென் கொல்வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்
கலைஞர் உரை :
தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றுஇருந்தாலும் அதனால் என்ன பயன்?. ஒன்றுமில்லை.
குறள் : 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்
கலைஞர் உரை :
மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.
குறள் : 4
வேண்டுதல்வேண் டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல
கலைஞர் உரை :
விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
குறள் : 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்
கலைஞர் உரை :
நெறிநின்றார் நீடுவாழ் வார்
கலைஞர் உரை :
மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்.
குறள் : 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது
கலைஞர் உரை :
ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
குறள் : 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
கலைஞர் உரை :
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது
கலைஞர் உரை :
அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
குறள் : 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
கலைஞர் உரை :
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை
கலைஞர் உரை :
உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
குறள் : 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்
கலைஞர் உரை :
வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
மேலும் பல அறிஞர்களின் சிந்தனைகளை காண எங்கள் பக்கத்தை தொடரவும்..
Quotes in tamil,love quotes,birthday quotes, celebration quotes,thirukural, kuzhanthai valarpu,sad quotes,feeling quotes,quotes about travel,quotes about time,quotes about nature,quotes about love,quotes about life,quotes about happiness,quotes about friendship,tamil quotes about education,tamil quotes images,tamil quotes about
Related searches
thirukkural with meaning in tamil
thirukkural tamil
thirukkural express
thirukkural adhikaram 1
thirukkural adhikaram
thirukkural
thirukkural for kids
thirukkural with meaning in tamil
thirukkural first 10
thirukkural history in tamil
thirukkural kalvi adhikaram
thirukkural kathaigal
thirukkural natpu adhikaram in tamil
thirukkural nandri
thirukkural meaning
thirukkural other names in tamil
thirukkural on friendship
thirukkural express
thirukkural tamil